×

செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு கோலம்: பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மார்ச் 16: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கொரோனா  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் நாகராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் சாமிக்கண்ணு, அன்பு, கற்பகம், முருகேசன், சம்பத், லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க மக்களாகிய நாம் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும்  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வை வழியுறுத்தும் வகையில் வண்ண வண்ண கோலமிடப்பட்டது.

Tags : Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...