×

வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு பூந்தமல்லியில் திடீர் போக்குவரத்து மாற்றம்: பயணிகள் அவதி

பூந்தமல்லி, மார்ச் 16: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதையடுத்து, தாசில்தார் அலுவலகம் உள்ள பகுதி வழியாக வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டது. இதனால் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி வந்த பேருந்துகள் பைபாஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பைபாஸ் சாலை சந்திப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த திடீர் போக்குவரத்து மாற்றம் குறித்து உரிய முன் அறிவிப்பு இல்லை. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் அலைக்கழிப்புக்கும் ஆளானார்கள். இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், வெளியூர் செல்லும் பயணிகளும் வெளியூரிலிருந்து பூந்தமல்லி வந்தவர்களும் பைபாஸ் சாலையிலலேயே இறக்கிவிடப்பட்டனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் பேருந்து நிலையத்துக்கு கொளுத்தும் வெயிலில் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்தே வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : Poonamallee ,
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...