×

கொடைக்கானலில் சோகம் கணவனுக்கு உடல்நலம் பாதிப்பு மனைவி தூக்கிட்டு தற்கொலை

கொடைக்கானல், மார்ச் 16: கொடைக்கானலில் கணவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் பெரியகுளத்தை சேர்ந்தவர் சற்குண பாண்டியன். இவரது மனைவி முத்து கருப்பாயி(30). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சமீபகாலமாக சற்குண பாண்டியன் மிகவும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். மேலும், குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. இதனால் மனமுடைந்த முத்து கருப்பாயி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துகருப்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்