×

காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சாலை சரிவு

திருச்சி, மார்ச்.15: ஓயாமரி சுடுகாடு எதிரே காவிரிக்கரையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, தார்சாலை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி - ரங்கம் காவிரி கரையில் ஓயாமரி சுடுகாடு அமைந்துள்ளது. சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ரங்கம் செல்லும் காவிரி பாலத்திலிருந்து ஓயாமரி சுடுகாடு வழியாக சென்னை பைபாஸ் சாலை செல்ல பாலத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் காவிரி ஆற்றின் கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புசுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. ஓயாமாரி சுடுகாடுக்கு அருகே நேற்று பள்ளம் தோண்டும் போது, மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கும் மேற்பட்ட தார் சாலை சரிந்து விழுந்தது.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. மண் சரிவு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தரமற்ற சாலை அமைத்ததே மண் சரிவுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags : Cauvery River ,
× RELATED பரமக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்