×

பாடாலூர் அருகே லாரி மோதி டிரைவர் பலி

பாடாலூர், மார்ச் 15: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் லாரி மோதி இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திரிச்சூலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (44). லாரி டிரைவரான இவர், நேற்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி லாரி ஓட்டி சென்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பிரிவு சாலை பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாலையின் எதிர்புறம் உள்ள டீ கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, சங்கர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Badalur ,
× RELATED டி.களத்தூர் அரசு பள்ளியில் வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை