×

உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு

உடுமலை,  மார்ச் 15: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில்  திமுக, அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக  சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, அமமுக  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட ஏராளமானோர் விண்ணப்ப மனு அளித்தனர். இதில் திருப்பூர் புறநகர் மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட  பொறுப்பாளர்களுக்கே கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கி உள்ளது.
உடுமலை  சட்டமன்ற தொகுதியில் அதிமுக., வேட்பாளராக அமைச்சர் ராதாகிருஷ்ணன்  போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக., செயலாளராகவும்  உள்ளார். இவரை எதிர்த்து, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் தென்னரசு, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இதேபோல்,  மடத்துக்குளம் தொகுதியில் திமுக சார்பில், திருப்பூர் புறநகர் தெற்கு  மாவட்ட பொறுப்பாளரான ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., போட்டியிடுகிறார். இவரை  எதிர்த்து, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரான மகேந்திரன் போட்டியிடுகிறார்.  அமமுக சார்பில், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரான சி.சண்முகவேல் களம்  காண்கிறார். அனைத்து கட்சிகள் சார்பிலும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Udumalai ,Madathukulam ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...