×

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். வைகுண்டம் அருகே வெவ்வேறு சம்பவம் லாரி டிரைவர் உள்பட இருவர் மர்மச்சாவு

வைகுண்டம், மார்ச் 15:  வைகுண்டம் அடுத்த தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த உலகநாதன் மகன் இசக்கிமுத்து (25). லாரி டிரைவரான இவர், வைகுண்டம் சிவன் கோயில் பின்புறம் உள்ள தண்ணீர் செல்லும் கல்மடையின் நடுவில் விழுந்து முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். தகவலறிந்து விரைந்துவந்த வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்ஐ வசந்தகுமார் மற்றும் போலீசார்,
இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்: நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (54), கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு சாந்தி (13) உள்ளிட்ட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கவுரி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தி, நேற்று காலை திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினார். அருகே தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ், இதை பார்த்து பதறியதோடு உடனடியாக சாந்தியை நாசரேத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினர். அதன்படி அம்மருத்துவமனைக்கு கொண்டுசென்ற சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Auwaikundam ,
× RELATED வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை