×

கங்கைகொண்டானில் வாலிபர் மர்மச் சாவு

நெல்லை,மார்ச்15:  கங்கை கொண்டான் அருகே வாலிபர் மர்ம சாவு குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கங்கைகொண்டான் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் (37) கூலி தொழிலாளி. இவருக்கு  மனைவி குழந்தைகள் உள்ளனர். தற்போது  கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இவரது வீடு  கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கங்கைகொண்டான் போலீசார் வந்து வீட்டை திறந்து பார்த்த போது முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gangaikonda ,
× RELATED காமதகனமூர்த்தி