×

நெல்லையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

நெல்லை, மார்ச் 15:  நெல்ைல மாநகரில்  குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளை தேர்வு செய்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றுவருகிறது. அன்புநகர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து பாளை சாந்திநகர், கடைவீதி, தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.  வாக்குபதிவு இயந்திர செயல்முறை விளக்கம் செய்யப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடத்தப்பட்ட பிரசார முகாமில் பாளை துணை தாசில்தார் பழனிகுமார், ஒருங்கிணைப்பாளர் கணபதிசுப்பிரமனியன், சமூக ஆர்வலர் முத்துசாமி, வருவாய் ஆர்வலர் மாரிதுரை வாக்குசாவடி மேற்பார்வையாளர் ஜாக்குலின் உள்ளிட்டடோர் முன்னிலை வகித்தனர்.
 ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான விஷ்ணு உத்தரவுப்படி பாளை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கண்ணன், விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் (பொறுப்பு) மகாலெட்சுமி, பாளை தாசில்தார் செல்வன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...