×

எல்லை பாதுகாப்பு படையினர் பேட்டையில் கொடி அணிவகுப்பு

நெல்லை, மார்ச் 15: சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு பேட்டை கண்டியப்பேரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பேட்டை கண்டியப்பேரி பகுதியிலுள்ள தெருக்களில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் மிடுக்குடன் பங்கேற்றனர்.

Tags : Border Security Force ,
× RELATED 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை