×

திருப்புத்தூர் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களை எஸ்பி ஆய்வு

திருப்புத்தூர், மார்ச் 15: தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் நேற்று மாலை திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். இதில் பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடிகளின் தன்மை குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புத்தூர் பகுதியில் இரணசிங்கபுரம், ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாபா அமிர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, தென்மாபட்டு, புதுப்பட்டி, நெடுமரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளையும், திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாககுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அலுவலகத்தை சுற்றியும் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags : SP ,Tiruputhur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்