×

சிபிஐ அதிகாரிகளுக்கு தடுப்பூசி

மதுரை, மார்ச் 15: மதுரையில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மதுரையில் உள்ள ஆத்திகுளத்தில் சிபிஐ அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செல்வராஜ், தண்டபாணி, மதுசூதணன், சூரியகுமார், சரவணன், அலுவலர்கள் உள்ளிட்ட 38 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவருக்கும், கே.புதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags : CBI ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...