×

செங்கல்பட்டு தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக வரலட்சுமி மதுசூதனன் அறிமுக கூட்டம்

செங்கல்பட்டு, மார்ச் 15: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி,, செங்கல்பட்டு தொகுதி திமுக  வேட்பாளராக வரலட்சுமி மதுசூதனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தார். இதனை கொண்டாடும் வகையில், செங்கல்பட்டு நகர திமுக சார்பில், நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில், திமுக நிர்வாகிகள் ஆர் .ராஜி, சந்தோஷ் கண்ணன், மகளிரணி நிர்வாகி மீராசபாபதி, திமுக நிர்வாகிகள் திருவள்ளுவன், அல்தாப், மார்க்சிஸ்ட் கம்னியூஸட் மாவட்ட செயளாள்ர் இ.சங்கர், மாவட்ட நிர்வாகி சண்முகம் உள்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று காட்டாங்ககொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சி சார்பில், சிங்கபெருமாள்கோவில் பஜார் வீதியில் செங்கல்பட்டு சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், ஒன்றிய இளைஞர்அணி நிர்வாகி கே.ஆர்.சி.ரத்தீஷ், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி கலைவாணி, உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கட்சியினருக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், திமுக தலைவரால் 2வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். கடந்த முறை கட்சியினர் ஒன்றாக இணைந்து செயலாற்றி, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததுபோல், இந்த முறை மேலும், கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய இன்று சபதம் ஏற்போம். திமுக ஆட்சி அமைந்தவுடன் செங்கல்பட்டு தொகுதியில் நீண்டநாள் கோரிக்கைகள், கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும், மு.க.ஸ்டாலின் 100நாளில் உங்களுக்கு நிறேவேற்றி தருவார். கூட்டணி கட்சிகளின் முழு ஒத்துழைப்போடு திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறவேண்டும் என்றார்.

Tags : Varakshmi ,Mathusudanan ,Introductory ,Sengalupu constituency ,
× RELATED கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல்...