×

திமுக வேட்பாளர் ராஜாவுக்கு சங்கரன்கோவிலில் கட்சியினர் வரவேற்பு

சங்கரன்கோவில் மார்ச் 14. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக தென்காசியை சேர்ந்த வக்கீல் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து நேற்று சங்கரன்கோவில் வந்தார். அவருக்கு திமுகவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர் சங்குபுரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். சங்கரன்கோவில் தொகுதியில் இம்முறை திமுக வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். சங்கரன்கோவில் மக்களின் நீண்டநாள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி தொழிலை முன்னேற்றும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்வேன். வாரம் ஒருமுறை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் சங்கரன், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவிஜயன், வக்கீல்கள் கண்ணன், ஜெயக்குமார், பெரியதுரை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சோம செல்வபாண்டியன், பொறியாளரணி அமைப்பாளர் சங்கர், விசிக தொகுதி செயலாளர் பீர்மைதீன், திமுக நகர விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் அஜய் மகேஷ்குமார், சங்கை சரவணன், இளைஞரணி சரவணன், பிரகாஷ், கார்த்தி, மாணவரணி உதயகுமார், அப்பாஸ்அலி மற்றும் நிர்வாகிகள் டைட்டஸ் ஆதித்தன், கோட்டூர்சாமி, வெள்ளத்துரை, எஸ்எம்டி.யாசின், தொண்டரணி காளிசாமி,  கோட்டைச்சாமி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல்நெல்சன், தொமுச செல்வகுமார், அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Raja ,Sankarankoil ,
× RELATED மோ(ச)டி வித்தை தமிழ்நாட்டில் எடுபடாது: வைகோ பேச்சு