×

கழுகுமலையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

கழுகுமலை, மார்ச் 14:  தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக கழுகுமலையில் காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்புக்கு நடந்தது. புதிய பேருந்து நிலையத்தின் முன்பிருந்து டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில்  போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மேலபஜார் மெயின்ரோடு, தேரடி வீதி, தெற்குரதவீதி, கீழரதவீதி, பிள்ளையார்கோவில் பேருந்து நிலையம், கோவில்பட்டி மெயின்ரோடு வழியாக காவல் நிலையத்தில் நிறைவுபெற்றது.   நிகழ்ச்சியில் கழுகுமலை இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, துணை ராணுவத்தினர், தமிழக சிறப்பு காவல் படை மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்