மார்ச் 14: மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 10ம் நாளான நேற்று உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலிலிருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜ வீதிகளின் வழியாக யானைகால் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பெருமாள் வேணுகோபால் அலங்காரத்தில் தங்க சூர்யபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், பகவதி சரணம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.