×

கொல்லங்கோடு அருகே மினி டெம்போவில் ெகாண்டு சென்ற ₹1 லட்சம் பறிமுதல்

நித்திரவிளை, மார்ச் 14: கொல்லங்கோடு  அருகே ஊரம்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கிள்ளியூர் சட்டமன்ற  தொகுதி மாநில தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி செல்வி தலைமையில் சிறப்பு  எஸ்ஐ வின்சென்ட், ஏட்டுகள் ஜுகுன் காந்த், எட்வின் ஜோஸ் ஆகியோர் வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு மினி டெம்போவை சோதனை  செய்த போது, அதில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து  இருநூற்று ஐம்பது ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள்  ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூபாயை பறிமுதல் செய்து  கிள்ளியூர் தாலுகா  அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.

Tags : Kollankodu ,
× RELATED கொல்லங்கோடு அருகே வாகனத்தில் வந்து...