வெள்ளக்கோவில், மார்ச் 14: வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் முறையில் வாராந்திர தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 40 பேர் 6616 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 39.20 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 32.60 ரூபாய்க்கும், சராசரி 39.15 ரூபாய்க்கும் ஏலம் போனது. 2.4 டன் தேங்காய்கள் ரூ.88 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதே போல் நடந்த கொப்பரை ஏலத்தில் 1922 கிலோ கொப்பரை ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்துக்கு ஏலம் போனது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.133.70க்கும், குறைந்த பட்சம் ரூ.104க்கும் ஏலம் போனது. 40 விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.