×

ஊதியூர் அருகே வாலிபர் தற்கொலை

காங்கயம், மார்ச் 14:  ஊதியூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்டார். ஊதியூர் அடுத்துள்ள, கொடுவாய் அருகே பள்ளிபாளையம், கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் பழனி .இவரது  மகன் கார்த்தி(30), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். அதனால் திருமணம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி  நேற்று காலை கொடுவாய் சந்தைப் பேட்டை அருகேயிருந்த புளிய மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவயிடம் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ooty ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...