×

திருவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திருவில்லிபுத்தூர், மார்ச் 14:திருவில்லிபுத்தூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து மூன்றரை பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூரில் உள்ள மங்காபுரம் தெருவில் வசித்து  வருபவர் முத்துமாரி(33). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் பகுதி உடைக்கப்பட்டிருந்தது.  மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் மூன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துமாரி திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...