×

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மேலூரில் பயிற்சி முகாம்

மேலூர், மார்ச் 14:  மேலூரில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் பயிற்சி முகாம் நடைபெற்றது.   சட்டமன்ற தேர்தலையொட்டி, மேலூர் அரசு கலைக் கல்லூரியில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.  இதில், தேர்தல் நடத்தும் அலுவலர், மேலூர் ஆர்டிஓ ரமேஷ் தலைமை வகித்தார். முன்னதாக பயிற்சிக்கு வந்த ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
 பயிற்சி முகாமில் வாக்குசாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எப்படி செயல்பட வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தினை கையாளும் முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

Tags : Melur ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி