×

திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பழநியில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி

பழநி, மார்ச் 14:  தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதில் பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமார் போட்டியிட உள்ளார். நேற்று பழநி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிவகிரிப்பட்டி ஊராட்சியில் உள்ள தட்டான்குளத்தில் தனது முதல் பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக அங்குள்ள காளியம்மன் கோயிலில் வழிபாடு செய்த பின், அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பொதுமக்களிடம் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது, திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தற்போதைய சட்டமன்ற தேர்தலின் கதாநாயகனாக உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளோடு நின்று விடாது. ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும். திமுக ஆட்சில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் பழநி தொகுதிக்கு எந்தவித பிரயோஜனமான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. எனது தொகுதி மேம்பாட்டு நிதியை  கொண்டு மட்டுமே திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் எனது 70% கோரிக்கைகளை நிறைவேற்றப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு திமுக தேர்தல் அறிக்கையில் 70க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவின் அறிவிப்புகள் நிறைவேற மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Senthilkumar ,MLA ,Palani ,DMK ,
× RELATED வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!