×

முதல் நாளில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல்

ஊட்டி, மார்ச் 13: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளான நேற்று ஊட்டியில் படுக தேச பார்ட்டி கட்சி தலைவர் மஞ்சைமோகன் வேப்புமனு தாக்கல் செய்தார். ஊட்டி தொகுதியில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல், முதல் நாளான நேற்று குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யப்படவில்லை. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வரும் திங்கட்கிழமை முதலே வேட்புமனுதாக்கல் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...