×

திருச்சுழியில் `சோதனை’ தரும் சோதனைச்சாவடி ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி

திருச்சுழி, மார்ச் 13: திருச்சுழியில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் அறிவித்த நிலையில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சுழியிலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலை வழியாக காரைக்குளம், தாமரைக்குளம், உடையனாம்பட்டி, சென்னிலைக்குடி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.  தேர்தல் விதிகள் பின்பற்றபடுவதால் தாலுகா அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டு  இவ்வழியாக செல்ல அனுமதிக்கின்றனர். நேற்று வெளியூரிலிருந்து  கிராம கோயிலில் தெய்வ வழிப்பாட்டிற்காக வாகனங்களில் வந்த பக்தர்களை இச்சாலையை  பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இதனால் இந்த வழியாக செல்ல முடியாமல் சுமார் 7 கி.மீ சுற்றி சொந்த கிராமங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சொந்த கிராமங்களிலிருந்து திருச்சுழிக்குள்  நுழைய தாலுகா அலுவலக சாலையை பயன்படுத்த முடியவில்லையென வேதனையுடன் தெரிவித்தனர். பொதுமக்கள் இப்பகுதி கிராமங்களுக்கு செல்ல அனுமதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....