×

100% வாக்களிப்பதை வலியுறுத்தி பால்கோவாவில் விழிப்புணர்வு

திருவில்லிபுத்தூர், மார்ச் 13: தமிழக சட்டமனற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், பேரணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் விற்பனையாகும் பால்கோவா பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனையாகி வருகின்றன.அதற்காக திருவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை செய்யப்படும் முக்கிய நிறுவனங்களில் தேர்தல் அதிகாரி முருகன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சென்று விற்பனையாகும் பால்கோவா பாக்கெட்டுகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி தினமும் விற்பனையாகும் ஆயிரக்கணக்கான பால்கோவா பாக்கெட்டுகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி திருவில்லிபுத்தூர் உள்ள ஒரு பால்கோவா கடையில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி முருகன், உதவி தேர்தல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ஆனந்த கிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Balkova ,
× RELATED திருவில்லிபுத்தூரில் ஐயப்ப சீசன்:...