×

சாத்தூரில் தேர்தல் விதிமீறி அதிமுகவினர் ஊர்வலம் நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு

சாத்தூர், மார்ச் 13: சாத்தூரில் தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, நகர செயலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாத்தூர் அதிமுக வேட்பாளராக ரவிச்சந்திரனை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் அதிமுகவினர் சாத்தூரில் கிருஷ்ணன்கோயில் அருகே ஊர்வலமாக ெசன்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் மற்றும் நகர செயலாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் 700க்கும் மேற்பட்டோர் தேர்தல் விதிகளை மீறி கூடியுள்ளனர்.இதையடுத்து தேர்தல் நடைமுறை சட்டம் அமலில் இருக்கும் போது கொரோனா பரவும் நேரத்தில் அதிமுகவினர் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக கூடினர். அத்துடன் அரசு அனுமதியின்றி ஊர்வலம் சென்றுள்ளனர்.இதுகுறித்து சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  தர்மசுந்தர் கொடுத்த புகாரின் படி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் மற்றும் நகர செயலாளர் இளங்கோ மீது சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : AIADMK ,Sattur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...