×

சிவன் கோயிலில் வழிபாடு

தொண்டி, மார்ச் 13: தொண்டி அருகே உள்ள நம்புதாளை நம்புஈஸ்வரன் சமேத அன்ன பூரணி ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பதினோறு வகை அபிஷேகம் நடைபெற்றது. வில்வ இலையால் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. ஆறு கால பூஜையாக விடிய விடிய பக்தர்கள் சிவ புராணம் பாடினர். காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கண் விழிக்கும் விதமாக பெண்கள் கும்மி அடித்து சிவனை வழிபட்டனர்.

Tags : Shiva Temple ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே சிவன் கோயில் கும்பாபிஷேகம்: எம்எல்ஏ பங்கேற்பு