×

அலங்கை அருகே ரூ.86 ஆயிரம் பறிமுதல்

அலங்காநல்லூர்:  அலங்காநல்லூர் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை  நடத்தினர். அப்போது வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர்.  இதில், அய்யூரைச் சேர்ந்த மதுரைவீரன் ஆடு வியாபாரத்திற்காக சந்தைக்கு  சென்றுவிட்டு, ரூ.86 ஆயிரத்துடன் திரும்பியது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள்  இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வாடிப்பட்டி அரசு  கருவூலத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  ‘அரசியல் கட்சியினர் ஆங்காங்கே பணம் பட்டுவாடா செய்வதை கண்டுகொள்ளாமல் ஏழை,  எளிய நடுத்தர மக்கள் தங்களது தேவைக்காக கொண்டு செல்லும் பணத்தை பறக்கும்  படையினர் பறிமுதல் செய்வதாக குற்றம்சாட்டினர்.

Tags : Alangai ,
× RELATED நிலுவை தொகையை வழங்க கோரி அலங்கை சர்க்கரை ஆலையில் உள்ளிருப்பு போராட்டம்