உடன்குடி,மார்ச் 13: மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6மணிக்கு செம்மறிக்குளம் கிராமம் விநாயகர் திடல் மெஞ்ஞானபுரம் பஜாரில் யானை முன்வர 11ம் ஆண்டு 108பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு நங்கைமொழி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். ஊர்வலத்தை நீதிபதி செல்வநாயகி கண்ணன் துவக்கி வைத்து வழி நடத்தினார். தொடர்ந்து முதல் கால பூஜை இரவு 7மணிக்கும், 2ம் கால பூஜை இரவு 10மணிக்கும், 3ம் கால பூஜை இரவு 12மணிக்கும், 4ம் கால பூஜை அதிகாலை 2மணிக்கும், 5ம் கால பூஜை அதிகாலை 4மணிக்கும் நடந்தது. முன்னதாக இரவு கலைநிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் மற்றும் கோயில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.