×

பாவூர்சத்திரம் ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்தவர் கைது

பாவூர்சத்திரம், மார்ச் 13: பாவூர்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 6ம் தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், 20 கிராம் நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்றார்.இதுகுறித்து பாலசுப்பிரமணியம், பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி பொன்னிவளவன்  உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், எஸ்ஐ கனகராஜ், சிறப்பு எஸ்ஐ இசக்கி  மற்றும் தனிப்படை போலீசார் கண்ணன், குமரேச சீனிவாசன், முஸ்தபா சவுந்தரபாண்டியன்  ஆகியோர்  சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சுரண் டை சிவகுருநாதபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த பாபு என்ற சொரூபன் பாபு (48) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து நகைகள், செல்போனை பறிமுதல் செய்த போலீசார், பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில்  கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Pavoorchatram ,
× RELATED பாவூர்சத்திரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை