×

சங்கரன்கோவில் ெதாகுதி வேட்பாளராக அறிவிப்பு அமைச்சர் ராஜலட்சுமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

சங்கரன்கோவில், மார்ச் 13:  சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் ராஜலட்சுமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் ராஜலட்சுமி அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சங்கரன்கோவிலுக்கு வந்த அமைச்சர் ராஜலட்சுமிக்கு தேவர்குளத்தில் மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையிலும், சங்கரன்கோவில் தேரடி திடலில் அதிமுகவினர் ஒயிலாட்டம், பேண்ட் வாத்தியங்களுடனும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கர நாராயண சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். இதில் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் நயினார், யூனியன் முன்னாள் சேர்மன் முருகையா, பேச்சாளர் கணபதி,  மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் சந்திரசேகர், ஒன்றிய பேரவை செயலாளர்கள் குருவிகுளம்  ஜெகதீசன், மானூர் செந்தில்குமார், ஒன்றிய முன்னாள் செயலாளர் ராமசாமி பாண்டியன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல்ஹமீது, தலைவர் முருகன், நிலவள வங்கி தலைவர் லட்சுமணன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துக்குட்டி, ராமதுரை, ஜெயலட்சுமி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் திரவியம், ஆபரேட்டர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Minister ,Rajalakshmi ,Sankarankoil ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...