×

மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவிப்பு நிரவி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்காவிட்டால் போராட்டம்

காரைக்கால், மார்ச் 13: காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து, நிரவி கிழக்கு பகுதிக்கு உட்பட்ட தெற்கு தெரு, தைக்கால் தெரு, புது தைக்கால் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சில டேங்க் ஆபரேட்டர்களின் மெத்தனப்போக்கே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிரவி கிழக்கு பகுதிக்கு தொடர்ச்சியாக குடிநீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிரவி தொகுதி பொருப்பாளர் விடுதலைக்கணல் தெரிவித்துள்ளார்.

Tags : Niravi ,
× RELATED காரைக்கால் அடுத்த நிரவியில்...