×

பெரம்பலூர் எஸ்பி ஆய்வு பாடாலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

பாடாலூர், மார்ச் 13: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே நேற்று முன்தினம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து சென்று அவரை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவர் யார் எந்த ஊர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Perambalur SP ,Badalur ,
× RELATED டி.களத்தூர் அரசு பள்ளியில் வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை