×

பட்டுக்கோட்டையில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டை, மார்ச் 13: பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்தப்ளக்ஸ் பேனரில் அனைவரும் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் பாலச்சந்தர் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழியை வாசிக்க, நகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் எடுத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் பாலச்சந்தர் முதல் கையொப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய அமைப்பாளர்கள் பிரவீனா, சரண்யா, ராஜப்பிரியா தலைமையிலான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நகராட்சி அலுவலக வாயிலில் கோலம்போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...