×

கலெக்டர் தகவல் ரங்கம் தொகுதியில் வேட்பு மனுக்களை வாங்க அரசியல் கட்சியினர் மும்முரம்

திருச்சி, மார்ச் 13: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக சட்டமன்ற தேர்தல் கால அட்டவணை கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை நாட்கள் நீங்கலாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.இதனால் நேற்று ரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் என ரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அலுவலக பகுதியில் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று முதல் நாள் என்பதால் வேட்பு மனுக்களை அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வாங்கிச்சென்றனர். அதன்படி அதிமுக, அமமுக, பகுஜன் சமாஜன் கட்சி, மக்கள் நீதிமையம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 17 மனுக்களை வாங்கிச்சென்றனர். ஆனால் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் வரும் திங்கள் கிழமை முதல் வேட்புமனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Collector Information Aurangabad ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி