×

நாசரேத்தில் ரத்த தான முகாம்

நாசரேத் மார்ச் 12: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.“   நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடந்த ரத்த தான முகாமுக்கு  கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன்  தலைமை வகித்தார்.  தூய யோவான் பேராலய தலைமை குரு ஆண்ட்ரூ விக்டர் ஞானஒளி ஜெபித்து, முகாமை துவக்கிவைத்தார். இதில் மாணவர்கள் 74 பேர் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சாந்தி தலைமையில் ரத்த வங்கி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பால் ஆபிரகாம், தியாகராஜன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.  ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Blood Donation Camp ,Nazareth ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்