×

குளத்தூர் அருகே வெவ்வேறு சம்பவம் வியாபாரி உள்பட இருவர் தற்கொலை

குளத்தூர், மார்ச் 12: குளத்தூர் அருகே வெவ்வேறு இடங்களில் வியாபாரி உள்பட இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். குளத்தூர் அருகே தருவைகுளம் அடுத்த மேலமருதூரைச் சேர்ந்தவர் பொய்யாழி (30). கொய்யாபழ வியாபாரி. இவரது மனைவி மாரிச்செல்வி. தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவருடன் பேசுவதை மாரிச்செல்வி தவிர்த்துவிட்டாராம். இதனால் விரக்தியடைந்த டைந்த பொய்யாழி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த தருவைகுளம் போலீசார் பொய்யாழி உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்: குளத்தூர் அடுத்த வேப்பலோடை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர்  முத்துசாமி (33) ஜேசிபி ஆப்ரேட்டரான இவருக்கும், அதே பகுதியில் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த ராஜலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில்  பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியைடந்த முத்துசாமி, வேப்பலோடை- பட்டியூர் செல்லும் சாலையோரம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தருவைகுளம் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Kulathur ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா