×

வைகுண்டத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்

வைகுண்டம், மார்ச் 12:  வைகுண்டத்தில் காவல் துறை சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  டிஎஸ்பி வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேசுகையில், ‘‘தெருமுனை பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிமுறைகளின்படி காவல்துறையினரிடம் முன் அனுமதி பெறவேண்டும். தேர்தல் முறைகேடுகள் ஏதும் இருப்பின் காவல்துறையினரிடம் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.அமைதியான முறையில் தேர்தல் நடந்திட அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு அவசியம்’’ என்றார் அவர். கூட்டத்திற்கு எஸ்ஐக்கள் சுரேஷ்குமார், வசந்தகுமார், சந்தன குமார் முன்னிலை வகித்தனர். இதில், திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், நகரச் செயலாளர் பெருமாள், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, வட்டார பொருளாளர் சந்திரன், நகரத் தலைவர் சித்திரை, வக்கீல் பிரிவு பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன்,  அதிமுக நகரச் செயலாளர் காசிராஜன், அமமுக வக்கீல் பிரிவு பொறுப்பாளர் சங்கரலிங்கம், நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், பாமக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில அமைப்பு துணைத்தலைவர் வள்ளிநாயகம்,  மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன், பாஜ ஒன்றிய தலைவர் சாமிநாதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்டச் செயலாளர் வக்கீல் உடையார் பாண்டியன்,  மாவட்ட பொருளாளர் துரை சரவணன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Tags : Auwaikundam ,
× RELATED வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை