×

கயத்தாறு அருகே பைக் விபத்தில் பெண் பலி

கயத்தாறு, மார்ச் 12:  கடையநல்லூர் தாலுகா, சிவராமன்பேட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரும், இவரது மனைவி மாரியம்மாள் (23) என்பவரும் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள உறவினர் இல்ல விழாவில் பங்கேற்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கயத்தாறு அருகே தேவர்குளம் செல்லும் சாலையில் அய்யனாரூத்து இந்திரா காலனி அருகே வந்தபோது, குறுக்கே சென்ற நாய் மீது பைக் மோதியது. இதனால் பைக் நிலைகுலைந்தபோது பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாள் நிலை தடுமாறி  கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். தம்பதிக்கு மதுபாலா என ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
 தகவலறிந்து விரைந்து வந்த கயத்தாறு போலீசார், மாரியம்மாளின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kayathar ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...