×

திருப்புத்தூர் அருகே இன்று நடைபெற இருந்த மஞ்சு விரட்டு ரத்து

திருப்புத்தூர், மார்ச் 12: திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரில்  இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புதூர் கிராமத்தினர் செய்து வந்தனர். மஞ்சு விரட்டு நடைபெறும் இடத்தில் கேலரி அமைத்தல், மேடை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 12ம்) தேதி நடைபெற இருந்த மஞ்சு விரட்டுக்கு வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை  அதிகாரிகளும் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்பு வழங்க இயலாது என கூறிவிட்டது. இதனால் இன்று மஞ்சு விரட்டு நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்பட்டது.
கிராமத்தினர் சார்பில் கூறுகையில், ‘பல வருடங்களாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு நிறுத்தப்படுவது வருத்தமளிக்கிறது’ என்றனர்.

Tags : Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்