×

பாலமுருகன் கோயிலில் பால்குட ஊர்வலம்

சிங்கம்புணரி, மார்ச் 12: சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பாலமுருகன் தெய்வீகப் பேரவை சார்பாக பாலமுருகனுக்கு பால்குட விழா நடைபெற்றது. பால்குட விழாவை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 2,500 அடி உயரமுள்ள மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோயிலை அடைந்தனர்.
அங்கு பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Balkuda ,Balamurugan temple ,
× RELATED சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாயகர் கோயிலில் பால்குட விழா