×

பரமக்குடி அருகே இரண்டு விபத்தில் 3 பேர் பலி

பரமக்குடி, மார்ச் 12: மாவிலங்கை அருகே உள்ள கீழ்பம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிட்டு சத்திரக்குடி காவல்நிலையத்துக்குட்பட்ட மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக ராமநாதபுரம், பேராவூரை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் அஜித்குமார் ஆகியோர் வந்த டூவீலர் ஆறுமுகம் மீது மோதியது. இதில் ஆறுமுகம், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோல் மானாமதுரை அருகே உள்ள கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் ராமு(50). இவர் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் பூங்கா நகர் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றபோது, எதிரில் வந்த டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு டூவீலரில் வந்த மதுரையை சேர்ந்த பிரசன்னா(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சிவகுரு (23) படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமு, பிரசன்னா ஆகியோரது உடல்களை மருத்துவ பரிசோதனைக்கு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு