×

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் முன்னேற்பாடு தீவிரம்

பரமக்குடி, மார்ச் 12: சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குவதை முன்னிட்டு, பரமக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் முன்னேற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களின் வாகனங்கள் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்துவதற்காக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சாலையில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களுடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்களை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை சார்ந்தவர்கள் வாங்கிச் சென்றனர்.

Tags : Paramakudi ,Assembly ,
× RELATED பரமக்குடி அருகே மர்ம கும்பல்...