×

பேரணாம்பட்டில் தாலுகா அலுவலகம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

பேர்ணாம்பட்டு, மார்ச் 12: பேரணாம்பட்டு பெரிய மஜித் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் அஹமத்(54), ராணிப்பேட்டையை சேர்ந்த சிவகுமார்(41), ஐதராபாத்தை சேர்ந்த ராகேஷ் ஜெயின்(60), ஆகியோர் நேற்று தொழில் சம்பந்தமாக பேரணாம்பட்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது பேரணாம்பட்டு தாலுகா அலுவலகம் அருகே எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சிவகுமார், அம்ஜத் அஹமதி மற்றும் ராகேஷ் ஜெயின் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேப்சன்பேரணாம்பட்டு தாலுகா அலுவலகம் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Peranampattu ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...