×

அரவக்குறிச்சி பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, மார்ச் 12:அரவக்குறிச்சி பகுதிகளில் இலவச தண்ணீர் பந்தல் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே அரவக்குறிச்சி பகுதியில் கோடைகாலம் துவக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சியிலிருந்து வேலைக்காக வெளியூருக்கும், பல்வேறு இடங்களுக்கு தினமும் நூற்றுக்கனக்கானவர்கள் தங்கள் வேலை நிமித்தமாக அரவக்குறிச்சிக்கு வருகின்றனர். அரவக்குறிச்சியிலுள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தாலுகா அலுவலம் அருகில், போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் உள்பட இடங்களில் இலவச தண்ணீர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...