நாகை, மார்ச் 12: நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் ஜம்ருத்நிஷா தலைமை வகித்தார். நாகை வட்ட துணைத்தலைவர் அமுதா வரவேற்றார். கூட்டத்தில் கடந்த மாதம் அரசு ஊழியர் நடத்திய மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற மகளிருக்கு மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி, மாவட்ட தணிக்கையாளர் ராமமூர்த்தி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜனநாயக மாதர் சங்க நாகை நகர செயலாளர் எழிலரசி ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ராகாந்தி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் ராணி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.