×

மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

ஜெயங்கொண்டம், மார்ச்12: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்றிரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இந்த வழிபாட்டை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், இலையூர் காசிவிசுவநாதர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், குவாகம் பிரகதீஸ்வரர், ஆலயம் காசி விஸ்வநாதர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர்.

திருத்துளார் அருளுடைய நாதர், வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை உள்ளிட்ட சிவன் கோயில்களில் நேற்றிரவு சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஈஸ்வரன் மற்றும் உள்ள சுவாமிகளுக்கு திரவிய பொடி, மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவனடியார்கள் பாராயணம் படித்தனர். ஒவ்வொரு ஈஸ்வரன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இரவு முழுவதும் கண்விழித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Gangaikonda Cholapuram Temple ,Maha Shivaratri ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்