×

கோடை துவங்கும் நிலையில் திருச்சியில் 241 மி.மீ. மழை பதிவு

திருச்சி, மார்ச்.12: திருச்சியில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் பெய்த மழையளவு 241 மி.மீ., என பதிவாகி உள்ளது.திருச்சி மாவட்டத்தில் திருச்சி, நவலூர்குட்டப்பட்டு, மணப்பாறை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் அதிகளவு மழை பெய்தது.மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள மழையளவு பதிவு மிமீ விவரம் வருமாறு:லால்குடி 10.20, மணப்பாறை 4.80, நவலூர் குட்டப்பட்டு 59.40, பொன்மலை 3.80, திருச்சி ஏர்போர்ட் 31.20, திருச்சி ஜங்ஷன் 60, திருச்சி டவுன் 45 என மொத்தம் 241.40 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. மாவட்ட சராசரியாக 9.66 என பதிவாகி உள்ளது.இது வழக்கமாக மழைக்காலங்களில் மாவட்டம் முழுவதும் சராசரியாக பெய்யும் மழையளவு. ஆனால், பனிக்காலம் முடிந்து கோடை துவங்கும் நிலையில் நேற்று முன்தினம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலேயே 241 மி.மீ., மழையளவு பதிவானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு