×

திருச்சி ஆழ்வார்தோப்பு ஓ பாலம் பகுதியில் கடைகளில் புகுந்த மழைநீரால் பொருட்கள் நனைந்து சேதம்

திருச்சி, மார்ச் 12: திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு ஓ பாலம் பகுதியில் நேற்று பெய்த மழையால் மழை தண்ணீர் சாலைகளில் அதிகளவில் தேங்கியது.இதனால் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் தண்ணீர் உட்புகுந்து கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதனால் மாநகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆழ்வார்தோப்பு கிளை தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் நிர்வாகிகள் சேதமடைந்த பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று அரியமங்கலம் கோட்டம் அலுவலகத்தில் வைத்து அதற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஓ பாலம் பகுதியில் நிரந்தரமாக மழை தண்ணீர் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags : Trichy Alwarthoppu O bridge ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி