×

குடும்ப தகராறில் விபரீதம் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர், 2 குழந்தைகள் சீரியஸ்

சென்னை: சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (29), வீட்டின் எதிரே ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கண்ணகி (28). தம்பதிக்கு கவி வர்ஷன் (5), நட்சத்திரா (2) என 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜ்குமார் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ராமசாமி ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது, ராஜ்குமார், அவரது மனைவி கண்ணகி மற்றும் 2 குழந்தைகளும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


அதன்படி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கண்ணகி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் 2 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமாருக்கு முகத்தில் தீக்காயங்கள் உள்ளதால் அவரிடம் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ராஜ்குமார் குடும்பத்தினர் தகராறு காரணமாக தற்கொலை முயற்சி செய்தார்களா? அல்லது கடன் பிரச்னை காரணமாக தற்கொலை முடிவுக்கு சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...